பேரின்பம்

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
உண்மையை நாடி அறியும் விருப்பம் உள்ளவர் தேவர்களின் தலைவனான சிவபெருமானின் நெருக்கத்தை நாடுவார், சிவதத்துவத்தை விளங்கப் பெறுவார். அவர்கள் நல்ல நெறியில் நின்று பிறரையும் அவ்வாறு நிற்கும்படி செய்வார். அப்படிப்பட்ட பெரியார்களுடன் பழகுதல் பேரின்பமே!

Who seek the Truth will seek the Lord,
Will attain Siva Truth,
Will stand in good virtue.
To be friend with them Is indeed a Bliss.