எல்லாம் சிவனே!

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
இந்த பெரிய நிலப்பரப்பாகிய உலகை தாங்கியவாறு வானமாக நிற்பது சிவபெருமானே! சுடும் தீயாக இருப்பவன் அவனே! சூரியனும் அவனே! சந்திரனும் அவனே! மழையை பொழியும் தாயும் அவனே! பெரிய மலையும் அவனே! குளிர்ந்த கடலும் அவனே!

(இருநிலம் – பெரிய நிலம், அங்கி – தீ, தையல் – சக்தி, தடவரை – பெரிய கடல், தண்கடல் – குளிர்ந்த கடல்)

Lord Shiva, Himself holding this world, stand as the sky,
Himself the Fire, the Sun and the Moon,
Himself the mother giving Rain,
Himself the Big Mountains, the cold Ocean.