உபசாந்தம் – மன அமைதி

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.  – (திருமந்திரம் – 2506)

விளக்கம்:
முக்திக்கு வித்து சிவஞானம். பக்திக்கு வித்து பணிந்து அவன் திருவடி பற்றி இருத்தல். சித்திக்கு வித்து சிவனுடன் பொருந்தி இருந்து தானும் சிவம் ஆதல். சக்திக்கு வித்து உயிர்களிடையே விருப்பு வெறுப்பு இல்லாமல் மன அமைதியுடன் இருத்தலே.

ஆன்மீக வாழ்வில் மன அமைதியே மிகவும் முக்கியமானதாகும், மன அமைதி மிகுந்த சக்தி தரும். மனம் அமைதி பெற, விருப்பு வெறுப்பு இல்லாதிருப்போம்.

(உபசாந்தம் – விருப்பு வெறுப்பு இல்லாமை, மன அமைதி)

Seed for mukthi (self realization) is knowledge about our primal God Siva.
Seed for bakthi (devotion) is seeking his Holy Feet.
Seed for siddhi (spiritual power) is one becoming Siva
Seed for sakthi (strength) is the state of upasanta – being peaceful.