எல்லாம் விதிப்படியே!

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. – (திருமந்திரம் – 45)

விளக்கம்:
கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் இறைவன் விதித்தபடி அல்லாமல் வேறு எப்படி இயங்க முடியும்? விதியின் வழியில் வந்த இன்பம் குற்றமில்லாதது. நாள்தோறும் அந்த சோதி வடிவான சிவனை துதிப்போம். அவன் வீடு பேறு அடையும் வழி காட்டும் சூரியன் ஆவான்.

ஆன்மிக இன்பம் மட்டுமே இயற்கையானது, விதி வழியானது, குற்றமில்லாதது.

(வேலை – கடல்,  விருத்தம் – குற்றம்,   நித்தலும் – எந்நாளும்,   பதி – வீடு)

This sea surrounded world is happening only by His fate.
There is no fault in enjoyment happening through fate.
Let we praise our Lord daily, He is our eternal light.
He guide us towards the divine path.