இவை ஐந்தும் பெரும் பாவங்கள்

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்தின்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. – (திருமந்திரம் – 200)

விளக்கம்:
கொலை, களவு, கள், காமம், பொய் பேசுதல் ஆகியவை பெரும் பாவங்களாகும். அவற்றை விலக்கி விட்டு நம்முடைய மேலான தெய்வமாம் சிவபெருமானின் திருவடியைப் பற்றி இன்பத்தை உணர்வோம். அந்த இன்பத்தை உணர்ந்து விட்டால் பிறகு பாவங்கள் செய்ய மாட்டோம்.  எப்போதும் பேரின்பத்தில் திளைத்திருப்போம்.