பொதுமகளிர் சகவாசம் வேண்டாம்

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. – (திருமந்திரம் – 204)

விளக்கம்:
மரத்தின் இலைகளின் ஊடே காய்த்து தொங்கும் எட்டிப்பழம் பார்க்க அழகாகவே இருக்கும். பார்க்க அழகாக இருக்கிறதே என்பதற்காக அதை உண்ண முடியாது. அது விஷத்தன்மை உடையதாகும். பொதுமகளிர் சகவாசமும் எட்டிப்பழம் உண்பது போன்ற விஷயம் தான். அந்தப் பெண்கள் தங்கள் முலை அழகைக் காட்டி சிரித்து மயக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து விலகி நிற்கின்றவாறு நம் மனத்தை அறிவுறுத்தி வைக்க வேண்டும்.