குண்டலினி இருக்கும் இடத்தில் மனத்தை செலுத்துவோம்

நாபிக்குக் கீழே  பன்னிரெண் டங்குலந்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே.    – (திருமந்திரம் – 579)

விளக்கம்:
கொப்பூழுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் மனத்தை நிலை நிறுத்தும் மந்திரத்தை நாம் அறிந்து கொள்ளவில்லை. அந்த மந்திரத்தை நாம் அறிந்தபின் அந்த ஈசன் மகிழ்வோடு வந்து நம்மிடம் குடிபுகுவான்.

குண்டலினி இருக்கும் மூலாதாரத்தில் மனத்தை செலுத்தி நிலை நிறுத்தினால், அந்த ஈசன் நம் உள்ளத்தில் வந்து தங்குவான். அவனுடைய இனிய கீதத்தை நாம் உள்ளே உணரலாம்.

நாபி – கொப்பூழ்,   தாபி – நிலைநிறுத்து