பழமையான பரம்பொருள்

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே. – (திருமந்திரம் – 389)

விளக்கம்:
ஏழு உலகங்களையும் உண்டு உமிழ்ந்தவனான திருமால், தேவர்களுக்கெல்லாம் தலைவனான உருத்திரன், தன்னுடைய கழுத்துக்கு மேல் நான்கு முகங்கள் கொண்ட பிரமன் ஆகியோர் தத்தம் தொழிலைச் செய்து படைப்பை நிகழ்த்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் மேலே பழமையான பரம்பொருள் ஒன்று இருக்கிறது. திருமால், உருத்திரன், பிரமன் ஆகியோருக்கு அவரவர்க்கு உரிய தன்மையைக் கொடுத்தது அந்தப் பரம்பொருளே!