கயிலை வாழ் பராபரன்!

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. – (திருமந்திரம் – 390)

விளக்கம்:
ஓங்கி எழும் அலைகளைக் கொண்ட பெரும்கடலில் வசிக்கும் திருமாலுக்கும், மலர்ந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், தமக்கு மேலே நன்மை எல்லாம் தரும் பராபரன் ஒருவன் கயிலையிலே வசிக்கிறான் என்பது தெரியும். உலகில் ஒவ்வொரு உயிரும் உருவாகும் பொழுது, அவர்கள் அந்தப் பராபரனை உணர்வார்கள்!