எல்லாப் படைப்பிலும் உள்ளொளியாக இருக்கிறான்

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயனொளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. – (திருமந்திரம் – 392)

விளக்கம்:
சிவபெருமானை வழிபட்டால், அவன் நம் வாழ்வில், மாணிக்கம் ஒளி வீசுவது போன்ற ஒளியைக் கொடுப்பான். நன்மைகளை எளிதாக வாரி வளங்கும் நம் சிவபெருமானிடம் இருந்து அந்தப் பயனைப் பெறுவது எளிது. படைப்புத் தொழிலைச் செய்பவன் பிரமன். ஆனால் அவனது ஒவ்வொரு படைப்பிலும் நம் சிவபெருமான் உள்ளொளியாக விளங்கும் விதத்தை நாம் புரிந்து கொண்டால், அவனிடமிருந்து பயன் பெறுவது எளிதான வேலையாகும்.