சிவசக்தி விளையாட்டு!

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. – (திருமந்திரம் – 396)

விளக்கம்:
எல்லாப் படைப்பிலும் சிவன் அறிவு வடிவாகவும், சக்தி செயல் வடிவாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணக்கம் மிகுந்தவர்கள். இவர்களின் விளையாட்டுத் தான் இந்த உலகத்தின் இயக்கமாகும். பருவங்கள் மாறுவதும், பயன்கள் மாறுவதும் சிவசக்தி விளையாட்டே! உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும் சிவசக்தியானவர்கள் ஒன்றி இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடம் என்று எதுவுமில்லை, அவர்கள் இல்லாத பொருளும் எதுவுமில்லை.