என் வழி – தனி வழி

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. – (திருமந்திரம் – 35)

விளக்கம்:
சிவபெருமான் தனக்கென தனி வழி உடையவன். அப்பெருமானைப் போற்றுவோம், போற்றிப் புகழ்வோம். அவ்வாறு புகழ்ந்தால் அந்த ஈசன் மேலுலகத்தையும், நிலவுலகில் உள்ள எட்டுத் திசைகளையும் நமக்கு அருள்வான். அவற்றை நம் விருப்பப்படி ஆளலாம்.

The Lord has His own way.
Let us praise and sing over Him.
If we praise him, He'll grant us all the eight directions
and the Celestial World, we can rule over them.

கண்ணகத்தே நின்று காதலித்தேனே!

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. – (திருமந்திரம் – 31)

விளக்கம்:
சிவபெருமான் அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு வெளிப்பட்டு அருள்வான். மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு மனித வடிவிலும், வானுலகில் உள்ள தேவர்களுக்கு தேவ வடிவிலும், முக்தி அடைந்தவர்களுக்கு வீடு பேறு தருபவனாகவும், சித்திகளை விரும்பியவர்களுக்கு சித்தனாகவும் விளங்குகிறான். அவன் இனிய பாடல்களின் இன்னிசையாகவும் விளங்குகிறான். அப்பெருமானின் அருள் பெற்று அன்பினில் நின்றேனே!

(வேதகம் – சித்து, கண் – அருள்)

The Lord shows Himself in different forms
according to every one's nature.
For human as human, for Devas as Deva, For Sidhas as sidha.
He is the music of divine song. Let us be in love of His Grace.

வணங்கி நின்றார்க்கு வழித்துணை அவனே

இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. – (திருமந்திரம் – 28)

விளக்கம்:
எல்லா உயிர்களுக்கும் இணக்கமாய் இருக்கிறான் சிவபெருமான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. உலகின் அனைத்துப் பொருள்களிலும் பின்னியவாறு விரவி உள்ளான். இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அவனே.  தேவர் உலகின் தலைவனான அவன் தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கிறான். அவன் தன்னை வணங்கி வழிபடுபவர்க்கு வழித்துணையாக வருவான்.

(பிணங்கி – பின்னியவாறு, உணங்கி – செயலற்று)

He comply with every one, He exists every where.
He intertwined with every thing in this world.
He is the past and future. He is the Lord of Amaravati.
He'll be a guide for those who worship Him.

படர்ந்து நின்றான் பாரகம் எங்கும்

தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. – (திருமந்திரம் – 26)

விளக்கம்:
நம்மைத் தொடர்ந்து நிற்கும் சிவபெருமானை வணங்குவோம். அவன் உலகின் அனைத்திலும் பரவி உள்ளான். இந்த உலகைக் கடந்தும் அவன் இருக்கிறான். நமது சகசிரதள ஆயிரம் இதழ் தாமரை மலரிலே வாசம் செய்கிறான். அந்த சிவபெருமானை வணங்கி இருந்தால், அவனது திருவடியை அடையும் பேறு பெறலாம்.

The Lord is continuously following us.
He spread over every thing in this world,
He exists beyond this world too, He resides in our Sahasrara.
If we worship Him, we can reach His Holy feet.

அல்லும் பகலும் அருளுகின்றான்

வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.  –  (திருமந்திரம் – 23)

விளக்கம்:
எல்லாம் வல்ல ஆற்றல் உடையவன் நம் சிவபெருமான். கடலின் நடுவே அக்கினியை நிறுத்தி, கடல் நீரை எல்லை மீறாமல் நிறுத்தி வைப்பவன் அவன். அப்படிப்பட்ட நம் இறைவனை இல்லை என்று சொல்லி மறுக்காதீர்கள், அவன் இரவும் பகலும் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்தவாறு இருக்கிறான்.

Lord Siva, He is the God with capability.
He set fire amidst the ocean to prevent it crossing the limit.
Do not say He does not exist.
He is the one, who bless with grace for all the beings, day and night.

கானக் களிறு கதறப் பிளந்தவன்

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தனம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.  –  (திருமந்திரம் – 21)

விளக்கம்:
வானத்தில் உள்ள மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமால், பிரமன் மற்றும் தேவர்களின் இழிந்த பிறவியை நீக்கியவன் சிவபெருமான். அப்பெருமான் காட்டு யானை போன்ற நம் ஆணவத்தைக் கதறும்படி பிளந்தவன்.  அத்தலைவனைப் போற்றிப் புகழ்ந்திருந்தால், அவனுடன் இரண்டறக் கலந்திருந்து பேரின்பம் பெறலாம்.

He is the one who remove birth and death cycle of 
Lord Thirumal, Lord Brahma and other Devas.
He is the one who destroys our wild elephant like egotism.
Let us praise Him and be in close with Him.

இடியும் முழக்கமும் ஈசன் உருவம்

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.  –  (திருமந்திரம் – 20)

விளக்கம்:
நாம் கருவில் உதிப்பதற்கு முன்பே, நம் பிறப்பையும் இறப்பையும் வரையறை செய்தவன் சிவபெருமான். அப்பெருமான் வசிக்கும் அறநெறியை நாடி இருப்போம். அவ்வழியை நாடி இருப்போர்க்கு இடியும் முழக்கமும் கூட ஈசனின் உருவமாகவே தோன்றும். தொடர்ந்து அவ்வழியை நாடி இருந்தால் வாசனை மலர்கள் நிறைந்த மலைதனில் வசிக்கும் ஈசனைக் காணலாம்.

He is the one who assigned our birth and death very before.
Let us walk in the path that leads towards Him.
In that Holy path, even the thunder sound will be a form of Siva.
Pursuing in the path we shall reach Him, who resides in the fragrant mountain.

மெய்த்தவம் செய்பவரிடம் வந்து அமர்வான் சிவன்

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.  –  (திருமந்திரம் – 19)

விளக்கம்:
சிவபெருமான் ஏலம் போன்ற வாசனை கமழும் எழு உலகங்களைப் படைத்தவன். அவற்றை அழிப்பவனும் அவனே! பிறைச்சந்திரனை அணிந்திருக்கும் அவன், அனைத்தும் அறிந்த மூதறிவாளன். அவன் தன்னை நோக்கி மெய்த்தவம் செய்பவரின் மனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு அருள்பவன்.

The Lord created the fragrant seven worlds.
He is the destroyer of all worlds too.
He is the wisest of all. For those who do penance
over Him, He'll abide in their hearts.

ஈசன் உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை!

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.  –  (திருமந்திரம் – 17)

விளக்கம்:
நாமெல்லாம் பருவுடல், நுண்ணுடல் ஆகிய இரண்டு கூறுகளால் ஆனவர்கள். மாயையின் தொடர்புடைய நுண்ணுடலில் வாசனை மிகுந்திருக்கும். அந்த நுண்ணுடலில் மனத்தை செலுத்தி நம்முடைய ஒரே தெய்வமான ஈசனுடன் தொடர்பு கொள்வோம். ஈசன் உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை.

The body and soul mingle to form a being.
The soul has a fragrance, which is connected to Maya.
Let us fix our mind on our Soul to 
have relationship with our only God Siva.

வாள்நுதல் பாகன்

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே.  –  (திருமந்திரம் – 16)

விளக்கம்:
நன்கு திருத்தப்பட்ட சுருண்ட முடியில் கொன்றை மலரை அணிந்திருப்பவன் சிவபெருமான். அவன் ஒளி விளங்கும் நெற்றியுடைய உமையம்மையைத் தன் பாதியாகக் கொண்டவன். அமரரும் தேவர்களும் தாம் விரும்பியதை அடைய, தம் குற்றங்களைக் களைந்து, நற்குணங்களைப் பயின்று சிவபெருமானை நாடி இருப்பார்கள்.

Lord Siva wears laburnum flower on His curling hair.
He is always with Sakthi, who has a bright Forehead.
To fulfill their own wishes, the Devas & Celestials
Practice good deeds and adore the Lord.