கரும்பு கசக்கும் தேன் புளிக்கும்

கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய வானந்தம்
விரும்பியே யுள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.  – (திருமந்திரம் – 2976)

விளக்கம்:
நம் உடலில் காமமாகிய கரும்பும், அதன் சுவையாகிய தேனும் கலந்துள்ளது. அதே உடலில் தோன்றும் சிவானந்த வாசனையை உணர்ந்து நமது உள்ளம் அதை விரும்பியிருந்தால் மனம் மேலான உணர்வு அடையும். அதன் பிறகு கரும்பின் சுவை கசப்பாகவும், தேனின் சுவை புளிப்பாகவும் இருக்கும்.

சிவானந்த உணர்வை அடைந்து மனம் அதிலே பொருந்தி விட்டால், காம உணர்வு நம்மை விட்டு அகலும்.

(அரும்பும் – தோன்றும்,  கந்தம் – வாசனை)

In this body, cane like sexual desire and honey like its pleasure are there.
We have to feel the sprouted fragrance of Siva Bliss in our body,
Our mind soak in that feeling, reaching a higher state.
Then the sugarcane will be bitter in taste and the honey will be sour.

துரை