தண்டீசனின் கதை

உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.  – (திருமந்திரம் – 351)

விளக்கம்:
இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்தவன் தண்டீசன். அவன் ஒளி மிகுந்த மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து, அந்த மணல் லிங்கத்தை பசும்பாற் குடங்களால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட சண்டீசனின் தந்தை, அவனைக் கம்பால் அடித்தான். ஆனால் சிவபக்தியில் இருந்த சண்டீசனுக்கு தந்தை கொடுத்த அடி உறைக்கவில்லை. அதனால் மேலும் கோபம் கொண்ட அவனது தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தான். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டீசன், பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க, அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான், தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் தண்டீசனுக்கு அணிவித்தான்.

தண்டீசன் சண்டேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

One thought on “தண்டீசனின் கதை

Comments are closed.