பிதற்றுவதை விட மாட்டேன்

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் தானே. – (திருமந்திரம் – 38)

விளக்கம்:
பெரியவன், அரியவனான சிவபெருமானைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

பிறப்பில்லாத உருவம் கொண்ட அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

புகழ் பெற்ற எங்கள் நந்தியைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

என்னைப் பெருமை செய்தவனான அவனைப் பற்றி பிதற்றுவதை நிறுத்த மாட்டேன்.

(பேர் – புகழ்).

I won't stop speaking of Him, the Great, the Rare
I won't stop speaking of Him, the form of unborn
I won't stop speaking of Him, the renowned Nandi
I won't stop speaking of Him, he gave reputation for me.

தாமரை முகத்தான்

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 27)

விளக்கம்:
‘என்னை நேராகப் பார்’ என்று ஈர்க்கும்படியான தாமரை போன்ற முகம் கொண்டவன் ஈசன். முடிவில்லாத ஈசன் அருள் நமக்கே என்று நாள்தோறும் நந்தியை வணங்குகிறோம். அப்படி வணங்கப்படும் அவன் நம் மனத்தினில் புகுந்து நின்றானே.

(சந்தி – நேருக்கு நேராக பார்த்தல்,  அந்தம் – முடிவு,   புந்தி – மனம், அறிவு).

The Lotus like face of Siva, urge us to face it
For getting His endless Grace
We pray Nandi Daily, into our heart
the Lord Siva comes and stands there.

வண்ண வண்ணமாய் சிவபெருமான்

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. – (திருமந்திரம் – 46)

விளக்கம்:
“அந்தி நேர  வானத்தைப்  போன்ற சிவந்த மேனியை உடையவனே, அரனே, சிவனே” என்று பண்பட்ட அடியார்கள் சிந்தனை செய்து தொழுவார்கள்.

நாம் அந்த சிவபெருமானை “பழமையானவனே, எங்கும் நிறைந்திருக்கும் முதல்வனே” என்று தொழுவோம். ஞான வடிவான அவன் நம் மனம் புகுவான்.

(திருந்து – பண்பட்ட,  புந்தி – ஞானம்,   பரன் – நிறைந்திருப்பவன்).

Oh Hara! Oh Siva! you have a hue of sunset
Thus the reformed devotees think of Him and Pray.
He is the Earliest one! Primary of all! Spread over every thing
Thus we praise Him, He feature as Wisdom in our heart.

நம் தலைவன்

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே. – (திருமந்திரம் – 32)

விளக்கம்:
தேவர்களின் தலைவனான அவன், நமக்கும் தலைவன் ஆனவன். அவன் பத்து திசைகளிலும் நிரவி இருப்பான். விரிவான நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் அந்த தலைவனின் தன்மையை நாம் அறிந்து கொள்ளவில்லை. எங்கும் வியாபித்திருக்கும் தலைவனான அந்த சிவபெருமானின் அருட் தன்மையை பாடலாக பாடி வணங்குவோம்.

(மேவு – நிரவி,  மேவு – பரவி,   பாவு – வியாபித்தல்,  திசை பத்து – எட்டு திசைகளோடு மேல் மற்றும் கீழ் திசை சேர்த்து பத்து ஆகும்).

The Lord of Devas, He is our God
He pervades all the ten directions.
No one know His nature, He transcends all the seven worlds
Let we sing about his Grace and Worship Him.

முயற்சியும் பலனும்

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. – (திருமந்திரம் – 11)

விளக்கம்:
இந்த உலகின் பழமையை ஆராய்ந்து பார்த்தால், எம் சிவபெருமானுக்கு நிகரான வேறு ஒரு பெருந்தெய்வத்தை தொலைவிலும் பார்க்க முடியவில்லை, அருகிலும்  பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே, நம் முயற்சியின் பயனும் அவனே, மற்றும் மழை பொழியும் மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும்.

If we look the antiquity of this world, far and near
we can't see a mightier God than our Siva.
Himself our effort, Himself the fruit of effort,
Himself the rain, Himself the cloud. His name is Nandi.

திருநீறு நமக்கு கவசம்

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. – (திருமந்திரம் – 1666)

விளக்கம்:
எலும்புகளினால் ஆன மாலை அணிந்திருக்கும் சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீற்றை, எப்போதும் நம் நெற்றியில் இருக்குமாறு பூசி மகிழ்வோம். அது நமக்கு கவசமாகும். தீய வினைகள் நம்மிடம் தங்காது. சிவகதியை சார்ந்திருக்கச் செய்யும். திருநீறு பூசி இன்பமயமான சிவனின் திருவடியை சேர்ந்திருப்போம்.

(கங்காளன் – எலும்பு மாலை அணிந்திருக்கும் சிவபெருமான்)

Lord Shiva who wears garland of bones
adorned with Sacred Ashes. We too smear that Holy Ash.
The armored ash divert us from bad karmas to ideology of Shiva.
We shall reach his sweet Sacred Feet.

விதிகளினால் மட்டும் ஆகாது!

பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. – (திருமந்திரம் –33)

விளக்கம்:
இந்த பண்டைய உலகில், இதுவரை பல கடவுள்களின் பெயரில் பல வித விதிகளை ஏற்படுத்தியும் யாரும் உண்மை ஞானத்தை அறியவில்லை. கடவுளை  துதித்துப் பல பாடல்கள் பாட வல்லவர்கள் கூட உண்மையான ஞானம் இல்லாதவராய், உள்ளத்தில் அமைதி இல்லாமல் வாடுகின்றார்.

(மத விதிகளை கடைபிடிப்பதாலும், இறைவனை நோக்கி பாடல்கள் பாடுவதால் மட்டுமே ஞானம் அடைவது கடினம். மெய்ப்பொருளை நோக்கிய தேடலும் தவமும் அவசியம்.)

This very old world have seen many Gods,
many Rituals, but no one knows the truth.
Even those who sing Songs in praise of God,
Lacks of true Knowledge, with no peace in heart.

பிரதோஷ நாயகன்!

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.  – (திருமந்திரம் –68)

விளக்கம்:
நந்தி பெருமானின் அருளாலே ஆசிரியன் எனப் பேர் பெற்றோம். நந்தியின் அருளாலே மூலனாகிய சிவபெருமானை நாடினோம். இந்த உலகினில் நந்தியின் அருளினால் செய்ய முடியாத காரியம் என்ன உள்ளது? அந்த பெருமானின் வழிகாட்டுதலின்படி நான் இருக்கின்றேன்.

(நாதன் – குரு, ஆசிரியர்)

By Nandi's Grace, we got named as Guru,
By Nandi's Grace, We seek the Eternal Lord,
By Nandi's Grace, everything is possible in this world,
I remain by the guidance of Nandi.

சிவானந்தவல்லி!

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.  – (திருமந்திரம் –78)

விளக்கம்:
சிறந்த நகைகளை அணிந்துள்ள சக்தி, சிவானந்தவல்லி என்ற பெயர் கொண்டவள். எல்லையற்ற சிறப்பை கொண்ட அவள் என் பிறப்பை போக்கி ஆட்கொண்டாள். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய திருத்தலத்தைத் தனதாக உடையவள். அந்த சக்தியின் திருவடியை சேர்ந்திருந்தேனே!

(நேரிழை – சிறந்த நகைகளை அணிந்த பெண், பிறப்பறுத்து – அடுத்து பிறவியில்லாமல் செய்து, சீருடையாள் – புகழ் உடைய, செல்வம் உடைய, பதம் – திருவடி )

Jeweled with rich ornaments, named Eternal Bliss,
She remove our further births.
Of great fame, Mistress of Avaduthurai Siva,
I reached her Holy Feet and Surrender.

ஏ இவளே!

முத்துப்பாண்டிக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் அவன் கூப்பிடுவான். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு கூப்பிட்டுகிட்டிருந்தான். ரெண்டாமவள் வந்ததும் முதலாமவள் அவளே ஆகிட்டா. ரெண்டாமவள் இவளே ஆகிட்டா. இதுவரைக்கும் ரெண்டு பேரையும் அவன் ஒப்பிட்டு பார்த்ததில்லை.  அவளேங்கிறவ நல்ல செவப்பு நிறம், கச்சிதமான அமைப்புள்ளவ. ஆனா கொஞ்சம் பொம்மைத்தனம் இருக்கும். இவளே வேற மாதிரி. மாநிறம், கொஞ்சம் சுமாரா இருப்பா, ஆனா உயிர்ப்புள்ளவ. அவ இருக்கிற எடத்துல யாரும் சோம்பலா இருக்க முடியாது. பேச்சும் சரி, செயலும் சரி ஒரே படபடப்பு தான்.

ஏழு பிள்ளைக அவங்க வீட்டுல. எந்த பிள்ளை யார் பெத்ததுங்கிறது இப்போ முத்துப்பாண்டிக்கு ஞாபகத்துல இல்ல. அதெல்லாம் ஒரு விஷயமா! பிள்ளைகளுக்கே அதப்பத்தி கேள்வி இல்ல.  வீட்டுல சண்ட வருமான்னு கேட்குறீங்களா? சண்ட இல்லாத வீடெல்லாம் ஒரு வீடா!

ஒரு தடவ அவளேயான மூத்தவகிட்ட அந்த தெரு பெரிய மனுஷன் ஒரு ஆளு ஜாடமாடயா வீட்டு அந்தரங்கத்த பத்தி கேக்க, இளையவளுக்கு தெரிய வந்து, இப்போ அந்தாளு சின்ன மனுஷனாயிட்டாரு. இவளே அவர்கிட்ட கேட்ட கேள்விக்கெல்லாம் தெருவுக்கே காது கூசிப்போச்சு.

முத்துப்பாண்டிக்கு தொழில் சொந்தமா ஒரு சின்ன பலசரக்கு கடை. வேலைக்கு சம்பள ஆள் கிடையாது. ”ஏ இவளே! வந்து கொஞ்சம் கடைய பாத்துக்கோ”ன்னா வந்துருவா. இவ வந்ததில ரெண்டு வகைல லாபமாச்சு. நிறைய கடன் கொடுத்தா. கடன் கொடுக்குற வியாபாரத்துல லாபம் அதிகம்ன்னு சொல்லுவா. கடன திரும்ப வாங்குறதில டெரர் மொகம் காண்பிப்பா. கொள்முதலும் இப்ப அவ பொறுப்பா ஆகிடுச்சு. வெலை அடிச்சு பேசுவா. யார் யாருக்கு என்ன வெலைல சப்ளை ஆகுதுன்னு லிஸ்ட் போடுவா. இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்ன்னு முத்துபாண்டிக்கே புரியலை. “இவளே! நீ இங்க இருக்க வேண்டியவளே இல்ல”ன்னு சொல்லுவான். “அடப் போடா”ம்பா.

கடைல கணக்கெல்லாம் எழுதி வச்சுகிடுறதில்ல. எல்லாம் மனக்கணக்கு தான். கொஞ்ச கொஞ்சமா வீட்டுல துட்டு சேர ஆரம்பிச்சது. அவ வீட்ட பாத்துகிட்டா, இவ கடைய பாத்துகிட்டா. பக்கத்து தெருவில் ஒரு கடை வாடகைக்கு இருக்கிறதா தெரிய வந்ததது. துட்டு எவ்வளவு இருக்குன்னு எண்ணி பாத்தாங்க, ஒரு முப்பதினாயிரம் தேறிச்சு. சரின்னு இன்னொரு கடை ஆரம்பிச்சாங்க. புதுக்கடைய முத்துபாண்டி பாத்துகிட்டான், மொத கடைய இவ பாத்துகிட்டா.

முத்துபாண்டிக்கு கொஞ்சம் சிரமமா தான் இருந்தது. இவ அளவுக்கு அவனுக்கு சாதுர்யம் போதாது. இப்படித்தான் ஒரு நாள் பவுடர்  டப்பா வாங்கிட்டு போன ஒருத்தன் திரும்ப சண்டைக்கு வந்துட்டான்.

“ஒரு டப்பால அஞ்சு ரூவாயா கூட வச்சு விப்பீங்க?”ன்னு ஒரே சண்டை.

அந்த நேரம் வாடிக்கையா சாமான் வாங்குற பெண் உதவிக்கு வந்தது. பதிலுக்கு கூச்சல் போட்டது.

“இன்னொரு கடைல வெல கம்மியா இருந்தா, அதுல என்ன மாசம் போட்டிருக்குன்னு பாத்தியா? அத பாத்துட்டு வா மொதல்ல. பழைய டப்பா வெலைல புது டப்பா குடுப்பாங்களா?”

அவனும் அத நம்பி திரும்ப போயிட்டான்.

“சரி. நான் வாங்குனது எவ்வளவு ஆச்சு?”ன்னு கேட்டா அந்த பொண்ணு.

“நாப்பத்தாறு”

“எனக்கு வாங்க வேற கடை இல்லாமலா ரெண்டு தெரு தள்ளிருக்கிற ஒங்க கடைக்கு வாரேன். இந்தாங்க நாப்பது ரூவா போட்டுக்குங்க.”

“சரி இவளே”ன்னான்.