ஐந்து சிங்கங்கள்

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. – (திருமந்திரம் – 2026)

விளக்கம்:
நம் உடல் ஒரு காடு. அதில் ஐம்பொறிகளாகிய ஐந்து சிங்கங்கள் வாழ்கின்றன. இந்த ஐந்து சிங்கங்களும் வெளியே சென்று மேய்ந்து, பார்ப்பதை எல்லாம் ஆசைப்பட்டு வந்து நம் மனம் புகுந்து பிராண்டுகின்றன. இந்த சிங்கங்களின் நகங்களையும் பற்களையும் பிடுங்கி விட்டால் நாம் இறைவனை அடைவது உறுதி.

(அடவி – காடு,  அகம் – மனம்,    உகிர் – நகம்,  எயிறு – பல்)

Within us five lions are living, they are our five senses
They roam outside and return to our mind.
If we remove the claws and teeth of that lions,
It is sure that we shall reach God.

வரி செலுத்தி ஓய்ந்தோம்

ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில்
ஐவர்க்கு இறைஇறுத்து ஆற்றகி லோமே. – (திருமந்திரம் – 2027)

விளக்கம்:
ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை நமக்கு ஐந்து அமைச்சர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் ஒவ்வொருத்தரின் கீழும் தொண்ணுற்றாறு வீரர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரில் உள்ள ஒவ்வொருவரும் தாம்தான் நம்மை ஆள வேண்டும் என நினைக்கிறார்கள்.

இந்த அமைச்சர்கள் ஐவரும் நம்முடன் ஐந்து வகையான போர் தொடுத்தபடி இருக்கிறார்கள். இவர்களுக்கு நம்மால் வரி செலுத்தி மாளாது.

அரசர்களான நாம் நம் அமைச்சர்களை (ஐம்பொறிகளை) கட்டுபாட்டில் வைத்திருக்க முடியாமல் அவர்களின் போருக்கு பயந்து வரி செலுத்தி வருகிறோம்.

(மைந்தர் – வீரர்)

Our five senses are like five ministers under us.
Each minister have ninety six soldiers, each trying to rule us.
The five ministers are always doing war against us in their ways
Endless is the tax we are paying them.

ஒரு அடியார் போதும், நாடே சுபிட்சமாகும்

திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. – (திருமந்திரம் – 1868)

விளக்கம்:
அனைத்து திசைகளுக்கும் உரியவனான சிவபெருமானை, இனத்திற்கு ஒருவராது நாடி இருப்பார் ஆகில், அங்கே பகைவர் என்று யாரும் இருக்க மாட்டார். தவறாமல் மழை பெய்யும். யாருக்கும் மனக்குறை என்பது இராது. அந்த உலகத்தில் கெடுதல் என்பதே இராது.

(திகை – திசை,   அகக்குறை – மனக்குறை)

The Lord spreads over all directions.
If there is a man who pursue the Lord and remain so,
There will be no enmity there, rain will not fail
No dissatisfaction there, evil will not near that world.

சிவமணம் பூத்தது

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே. – (திருமந்திரம் – 1459)

விளக்கம்:
பூவினுள் வாசம் பொருந்தியிருப்பது போல நம் உயிருக்குள் சிவமணம் பூத்திருக்கிறது. இந்த விஷயம் ஒரு சித்திரத்தைப் போல் நம் மனதில் பதிந்து விட்டால் புனுகுப்பூனை அணைத்த தூண் ஆவோம்.

புனுகுப்பூனை தூணை அணத்துக் கொண்டால் அந்த தூண் மணம் பெறும். அது போல் சிவன் நம்மை அணைத்துக் கொள்வான், நாம் சிவமணம் பெறுவோம்.

(கந்தம் – வாசனை,   நாவி – புனுகுப்பூனை,    நடுதறி – நடப்பட்ட தூண்)

The flowers have fragrance within itself
Like that, our souls have the fragrance of Siva.
If we get the clear picture of this truth
We'll be like planted post, embraced by the musk cat.

திராணி இல்லாத பிராணிகள்

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. – (திருமந்திரம் – 2090)

விளக்கம்:
பெறுவதற்கு அரியதான பிறவியைப் பெற்றிருந்தாலும், நாம் அதன் அருமை தெரியாமல், பெறுவதற்க்கு அரியதான சிவபெருமானின் திருவடியை போற்றாமல் இருக்கிறோம்.

மனிதனாக பிறப்பது மிக அரிய விஷயம். அதை நாம் உணராமல் பெறுதற்கரிய சிவபேற்றை அடையும் வாய்ப்பை இழக்கிறோம்.

It is rare to get this birth
Yet we are not seeking Lord's feet.
It is rare to get birth as human
Yet we are missing the rare to get blessings of Siva.

முதலைக்கு பயந்து கரடியிடம் மாட்டிக் கொண்ட கதை

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. – (திருமந்திரம் – 1642)

விளக்கம்:
விரதம் இருந்து தவம் செய்ய முயலாதவர் சாஸ்திரம் அறியாதவர் ஆவார். அவர்கள் உணவுக்காக பொருள் தேடி அலைந்து வருந்துகின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் ஆற்றில் கிடக்கும் முதலைக்கு பயந்து ஓடிப் போய் குட்டியை ஈன்றுள்ள கரடியிடம் மாட்டிக் கொள்வதை போலாகும்.

In fear of crocodile, they ran out of river
but get caught by the bear having a cub.
Like this the unlearned people run away from Holy practices,
They are always roaming in search for food.

உயிரின் வடிவம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. – (திருமந்திரம் – 2011)

விளக்கம்:
உடலில் பொருந்தியுள்ள உயிரின் வடிவத்தை இப்படி சொல்லலாம். பசுவின் மயிர் ஒன்றை நூறாக பிளந்து, அந்த நூறில் ஒன்றை ஆயிரம் பகுதியாக்கினால் அது உயிரின் வடிவம்.

உயிரின் வடிவம், பசுவின் ஒரு மயிரில் நூறாயிரத்தில் ஒரு பங்கு. அதாவது உயிரின் வடிவம் மிகவும் நுன்மையானது, காண முடியாதது.

(மேவிய – பொருந்திய,  சிவன் – உயிர்,   கோ – பசு).

To speak about the size of the soul, it is like
splitting a cow's hair in hundred parts
and divide each part into thousand.
The size of Soul is thus one of hundred thousand parts.

விரதம் அவசியம்

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென்று இகலல்உற் றாரே. – (திருமந்திரம் – 56)

விளக்கம்:
பாட்டும், இசையும், பரந்து ஆடும் பொது மகளிர் ஆட்டமும் நீங்காத இந்த உலகில், அவற்றில்  மாட்டிக் கொள்ளாதவர்கள் உண்டு. அவர்கள் வேள்வி செய்யும் விருப்பம் கொண்டவராய் இருப்பர். அப்படி உறுதி இல்லாதவர் பயன் அனுபவிக்கும் இடம் சென்று சிக்கலில் மாட்டிக் கொண்டாரே.

(ஆட்டு – நடனம்,   அவனி – உலகம்,   விரதம் – உறுதி,   இகல் – சிக்கல்).

Detach from the world of song, music and prostitute's dance
Such people Seek the Holy Sacrifice to perform.
Those who don't have observance, seek the
world of desire, get caught in misery.

ஆயிர நாமங்கள் வாழ்க

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. – (திருமந்திரம் – 34)

விளக்கம்:
வேந்தனான சிவபெருமான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி, கலவையான மணம் கொண்ட கத்தூரியைப் போன்றது. நிறைந்த சுடர் போன்ற ஆயிரம் சிவ நாமங்களை நாம் ஓர் இடத்தில் இருக்கும் போதும் புகழுவோம்.  நடக்கும் போதும் புகழ்ந்து கொண்டே நடப்போம்.

(சாந்து – கலவை,  கவரியின் கந்தம் – கத்தூரி,  ஆர்ந்த – நிறைந்த,   போந்து – நடந்து).

வாசனைப் பொருளான கத்தூரி பற்றி தெரிந்து கொள்ள – http://en.wikipedia.org/wiki/Musk_deer

It is like the fragrance of the musk of the musk deer,
the true path given to Devas given by the Lord.
Like a full Glow remain His thousand names
We chant them while sitting and while walking too.

திருவடி சரணம்

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே. – (திருமந்திரம் – 43)

விளக்கம்:
சிவன் அடியை போற்றுவோம். அவன் அருள் கிடைக்க வேண்டுமென்று அரற்றி அழுவோம். அவன் திருவடியையே தினமும் நினைத்திருப்போம். மன உறுதியுடன் சிவன் திருவடியின் நினைவில் ஒதுங்கி இருக்க வல்லவர்க்கு அவன்  அடி எடுத்து நெருங்கி வருவான். நம்மிடையே நிறைந்து நிற்பான்.

(அரன் – சிவன்,   பரன் – கடவுள், உரன் – மன வலிமை,    நிரன் – நெருங்கி).

We speak of Siva's Holy Feet, weep and cry for his Grace
We think of His Holy Feet everyday.
For those who can surrender him, with strength of will
He comes close to them and pervade them.