வண்ண வண்ணமாய் சிவபெருமான்

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்தி வண்ணன்எம் மனம்புகுந் தானே. – (திருமந்திரம் – 46)

விளக்கம்:
“அந்தி நேர  வானத்தைப்  போன்ற சிவந்த மேனியை உடையவனே, அரனே, சிவனே” என்று பண்பட்ட அடியார்கள் சிந்தனை செய்து தொழுவார்கள்.

நாம் அந்த சிவபெருமானை “பழமையானவனே, எங்கும் நிறைந்திருக்கும் முதல்வனே” என்று தொழுவோம். ஞான வடிவான அவன் நம் மனம் புகுவான்.

(திருந்து – பண்பட்ட,  புந்தி – ஞானம்,   பரன் – நிறைந்திருப்பவன்).

Oh Hara! Oh Siva! you have a hue of sunset
Thus the reformed devotees think of Him and Pray.
He is the Earliest one! Primary of all! Spread over every thing
Thus we praise Him, He feature as Wisdom in our heart.

நம் தலைவன்

தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே. – (திருமந்திரம் – 32)

விளக்கம்:
தேவர்களின் தலைவனான அவன், நமக்கும் தலைவன் ஆனவன். அவன் பத்து திசைகளிலும் நிரவி இருப்பான். விரிவான நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் அந்த தலைவனின் தன்மையை நாம் அறிந்து கொள்ளவில்லை. எங்கும் வியாபித்திருக்கும் தலைவனான அந்த சிவபெருமானின் அருட் தன்மையை பாடலாக பாடி வணங்குவோம்.

(மேவு – நிரவி,  மேவு – பரவி,   பாவு – வியாபித்தல்,  திசை பத்து – எட்டு திசைகளோடு மேல் மற்றும் கீழ் திசை சேர்த்து பத்து ஆகும்).

The Lord of Devas, He is our God
He pervades all the ten directions.
No one know His nature, He transcends all the seven worlds
Let we sing about his Grace and Worship Him.

முயற்சியும் பலனும்

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. – (திருமந்திரம் – 11)

விளக்கம்:
இந்த உலகின் பழமையை ஆராய்ந்து பார்த்தால், எம் சிவபெருமானுக்கு நிகரான வேறு ஒரு பெருந்தெய்வத்தை தொலைவிலும் பார்க்க முடியவில்லை, அருகிலும்  பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே, நம் முயற்சியின் பயனும் அவனே, மற்றும் மழை பொழியும் மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும்.

If we look the antiquity of this world, far and near
we can't see a mightier God than our Siva.
Himself our effort, Himself the fruit of effort,
Himself the rain, Himself the cloud. His name is Nandi.

திருநீறு நமக்கு கவசம்

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. – (திருமந்திரம் – 1666)

விளக்கம்:
எலும்புகளினால் ஆன மாலை அணிந்திருக்கும் சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீற்றை, எப்போதும் நம் நெற்றியில் இருக்குமாறு பூசி மகிழ்வோம். அது நமக்கு கவசமாகும். தீய வினைகள் நம்மிடம் தங்காது. சிவகதியை சார்ந்திருக்கச் செய்யும். திருநீறு பூசி இன்பமயமான சிவனின் திருவடியை சேர்ந்திருப்போம்.

(கங்காளன் – எலும்பு மாலை அணிந்திருக்கும் சிவபெருமான்)

Lord Shiva who wears garland of bones
adorned with Sacred Ashes. We too smear that Holy Ash.
The armored ash divert us from bad karmas to ideology of Shiva.
We shall reach his sweet Sacred Feet.

பிரதோஷ நாயகன்!

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.  – (திருமந்திரம் –68)

விளக்கம்:
நந்தி பெருமானின் அருளாலே ஆசிரியன் எனப் பேர் பெற்றோம். நந்தியின் அருளாலே மூலனாகிய சிவபெருமானை நாடினோம். இந்த உலகினில் நந்தியின் அருளினால் செய்ய முடியாத காரியம் என்ன உள்ளது? அந்த பெருமானின் வழிகாட்டுதலின்படி நான் இருக்கின்றேன்.

(நாதன் – குரு, ஆசிரியர்)

By Nandi's Grace, we got named as Guru,
By Nandi's Grace, We seek the Eternal Lord,
By Nandi's Grace, everything is possible in this world,
I remain by the guidance of Nandi.

சிவானந்தவல்லி!

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.  – (திருமந்திரம் –78)

விளக்கம்:
சிறந்த நகைகளை அணிந்துள்ள சக்தி, சிவானந்தவல்லி என்ற பெயர் கொண்டவள். எல்லையற்ற சிறப்பை கொண்ட அவள் என் பிறப்பை போக்கி ஆட்கொண்டாள். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய திருத்தலத்தைத் தனதாக உடையவள். அந்த சக்தியின் திருவடியை சேர்ந்திருந்தேனே!

(நேரிழை – சிறந்த நகைகளை அணிந்த பெண், பிறப்பறுத்து – அடுத்து பிறவியில்லாமல் செய்து, சீருடையாள் – புகழ் உடைய, செல்வம் உடைய, பதம் – திருவடி )

Jeweled with rich ornaments, named Eternal Bliss,
She remove our further births.
Of great fame, Mistress of Avaduthurai Siva,
I reached her Holy Feet and Surrender.

நம் செல்வமெல்லாம் சிவனடிக்கே!

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.  – (திருமந்திரம் –24)

விளக்கம்:
புனிதனான அந்த சிவபெருமானின் திருவடியை புகழ்ந்து போற்றிப் பாடுவோம். மயங்கிக் கிடக்கும் நம் சிந்தையை மாற்றி நம்முடைய செல்வமெல்லாம் சிவனடிக்கே உரியதாகும் என தெளிவு பெறுவோம். அப்படி தெளிவு பெற்றவரிடத்தில் சிவன் நிலையாய் விளங்குவான்.

(மயலுற்ற – மயக்கம் அடைந்த, தேற்றுமின் – தெளியுங்கள்)

We praise and sing of his Holy Feet,
We dedicate all our treasures to his Holy Feet.
Thus who get cleared from their disturbed mind,
the Lord being with them firmly.

எங்கள் அண்ணலின் பெருமை!

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.   – (திருமந்திரம் – 95)

விளக்கம்:
யார் அறிவார் எங்கள் அண்ணலாகிய சிவபெருமானின் பெருமையை! யார் அறிவார் எம்பெருமான் இருக்கும் பரப்பின் அகலமும் நீளமும்! அந்த சிவபெருமான், பேர் அறியாத பெருஞ்சுடர் ஆவார். வேர் அறிந்து கொள்ள முடியாத அந்த பெருமானின் புகழ் கூறுகின்றேனே!

Who knows my Lord's Greatness!
Who can measure his dimension!
He is a nameless Mighty Flame,
I speak of his unknown Source.

பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்!

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.  – (திருமந்திரம் – 52)

விளக்கம்:
வேதத்தை அதன் பொருள் உணராமல், ஓசையளவில் ஓதுபவர் எல்லாம் வேதியர் ஆக மாட்டார். வேதம் இறைவனால் கொடுக்கப்பட்டது பிரம்மப் பொருளை உணரவும், அந்தணர் செய்யும் வேள்விக்காகவும். நாமெல்லாம் மெய்ப் பொருளை உணர்ந்து கொள்வதற்காகவே வேதம் உரைக்கப்பட்டது!

Those who speak the Vedas, without know the meaning are not pundits.
God spoke the Vedas to reveal its meaning,
God spoke the Vedas to perform the Holy Poojas,
God spoke them to make us manifesting the truth.

எல்லாம் சிவனே!

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
இந்த பெரிய நிலப்பரப்பாகிய உலகை தாங்கியவாறு வானமாக நிற்பது சிவபெருமானே! சுடும் தீயாக இருப்பவன் அவனே! சூரியனும் அவனே! சந்திரனும் அவனே! மழையை பொழியும் தாயும் அவனே! பெரிய மலையும் அவனே! குளிர்ந்த கடலும் அவனே!

(இருநிலம் – பெரிய நிலம், அங்கி – தீ, தையல் – சக்தி, தடவரை – பெரிய கடல், தண்கடல் – குளிர்ந்த கடல்)

Lord Shiva, Himself holding this world, stand as the sky,
Himself the Fire, the Sun and the Moon,
Himself the mother giving Rain,
Himself the Big Mountains, the cold Ocean.