உங்கள் வருமானம் மோரா அல்லது நெய்யா?

பழமொழி நானூறு – சான்றோர் செய்கை

சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப்
பெரியவர் நல்குரவு நன்றே – தெரியின்
மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்
முதுநெய்தீ தாகலோ இல்.

பாலிலிருந்து கிடைக்கும் மோரின் அளவு அதிகமாகவும் நெய்யின் அளவு மிகச் சிறிதாகவும் இருந்தாலும், மோரை விட நெய் வெகு நாள் கெடாமலும் நன்மை தருவதாகவும் உள்ளது. அதுபோல தீய வழியில் சேர்க்கும் அதிக செல்வத்தை விட நியாயமான முறையில் சேர்க்கும் செல்வம், வறுமை என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிறிதாக இருந்தாலும் நன்மை தருவதாகும்.


வில்லி பாரதத்தில் இருந்து ஒரு பாடல்

பச்சென்றதிருநிறமுஞ்சேயிதழும் வெண்ணகையும் பார்வையென்னும்
நச்சம்புமமுதூற நவிற்றுகின்ற மடமொழியு நாணும்பூணும்
கச்சின்கணடங்காதகனதனமும் நுண்ணிடையுங்கண்டு சோர்ந்து
பிச்சன்போலாயினனப்பெண்கொடிமெய்ந் நலமுழுதும் பெறுவானின்றான்.

பாண்டியன் மகள் சித்திராங்கதையைக் கண்டு அர்ச்சுனன் இவ்வாறு ஏங்குகிறான்.

பசுமையான அழகிய நிறத்தையும், செந்நிறமான அதரத்ததையும், வெண்ணிறமான பற்களையும், கண்ணின்பார்வை யென்கிற விஷந்தீற்றிய அம்பையும், அமிருதம்போன்ற மிக்க இனிமையாய் பேசுகின்ற அழகிய பேச்சுக்களையும், நாணமென்னுங் குணத்தையும், தரிக்கிற கச்சுக்கு அடங்காத பருத்த தனங்களையும், நுண்ணியஇடையையும் பார்த்து மனந்தளர்ந்து பித்துக்கொண்டவன் போலாயினான்.


கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை!

கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை – ஆனால் மனிதன்? மனிதன் இறையுள் வாழ்கிறான், ஆனால் அதைப் பற்றிய உணர்வு இல்லாமல். மனிதன் இறையினுள் பிறக்கிறான், இறையை சுவாசிக்கிறான், ஒரு நாள் இறையினுள் கலந்து விடுவான்.

கடலில் வாழும் மீன் தாகத்தில் தவிப்பதில்லை – ஆனால் மனிதன்? இறை தான் நம்மை சூழ்ந்துள்ள கடல், அது நமக்கு உள்ளேயும் வெளியேயும் பரவியுள்ளது. கடவுள் என்பது ஒரு நபர் அல்ல, நம்மை சுற்றி நிரம்பி வழியும் தெய்வீக இருப்பு.

இறை வழிபட வேண்டிய விஷயம் அல்ல. அது வாழ்ந்து உணர வேண்டும். அதற்காக எங்கும் போக வேண்டியதில்லை, நாம் இறையின் உள்ளேயே வாழ்கிறோம்.

இறையினை உணர நமக்கு மதம் எதுவும் தேவையில்லை, இந்த நொடி நம் மேல் இறை பொழிகிறது. ஆனால் நம்மை நாமே பூட்டிக் கொண்டிள்ளோம். நம் கதவு யுக யுகமாக தட்டப்படுகிறது, நாம் அதை கேட்க விரும்பவில்லை.

பழைய விவிலிய கதை ஒன்று உண்டு. ஆடம் தனக்கிடப்பட்ட கட்டளையை மீறிய போது கடவுள் அவனை தேடி வந்தார். அப்போது ஆடம் ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொண்டான். அவனுக்கு கடவுளை நேராக பார்க்கும் தைரியம் இல்லை. கடவுள் அந்த ஏதேன் தோட்டத்தில் “ஆடம்! நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்கிறார். ஆடம் அதற்கு பதில் சொல்லவில்லை. இது கதை இல்லை, நம்முடைய நிலை இது தான். நாம் கடவுளிடமிருந்து ஒளிந்து கொண்டிருக்கிறோம்.

From Osho’s discourse on ‘Talks on Kabir’